Home இலங்கை இஸ்ரேலிய பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்தவர் கைது…

இஸ்ரேலிய பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்தவர் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலிய நாட்டை சேர்ந்த 30 வயதான ஆசிரியையிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படும் நீர்கொழும்பு பேருந்து சாலையில் பணிப்புரியும் பேருந்து நடத்துனர் ஒருவரை காவற்துறையினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.

நீர்கொழும்பு காவல் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் நடத்திய விசாரணைகளை அடுத்து பேருந்து நடத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலை சேர்ந்த இந்த ஆசிரியை தனது கணவருடன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர்கள் கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து நீர்கொழும்பு செல்ல பேருந்தில் ஏறியுள்ளனர். இஸ்ரேல் பெண் சீனாவில் ஆசிரியையாக சேவையாற்றி வருகிறார்.

அவரும் அவரது கணவரும் பேருந்தில் இருந்து இறங்கும் போது பேருந்து நடத்துணர் இஸ்ரேலிய பெண்ணின் மார்பகங்களை பலந்தமாக தொட்டு பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணைகளை நடத்திய காவற்துறையினர் நீர்கொழும்பு கிம்புலாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பேருந்து நடத்துனர் உபுல் குமார விக்ரமசிங்க என்பவரை கைதுசெய்துள்ளனர். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More