Home உலகம் ஜெர்மனி தாதி சோமாலியாவில் கடத்தப்பட்டுள்ளார்

ஜெர்மனி தாதி சோமாலியாவில் கடத்தப்பட்டுள்ளார்

by admin


சோமாலியா தலைநகர் மொகடிவில் உள்ள மருத்துவ உதவி முகாமில் சேவையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த தாதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த  பெண் தாதி ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்

சோமாலியாவில் இடம்பெறும் தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் தங்கியுள்ளனர்.  இவ்வாறு இருப்பவர்கள் அல் ஷபாப் தீவிரவாதிகளால் கடத்தி செல்வதும் கொலை செய்வதும் அங்கு வழமையாக இடம்பெற்று வருகின்றநிலையில் ஜேர்மனிய தாதியும் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More