Home இலங்கை முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவில் கட்சி அரசியலுக்கு இடம் இல்லை….

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவில் கட்சி அரசியலுக்கு இடம் இல்லை….

by admin


முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுதினத்தில் அரசியல்வாதிகளின் கட்சிசார் அரசியலுக்கு இடமில்லை என யாழ்.மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் நடைபெற்ற யாழ்.மறைமாவட்ட நீதி சமாதானத்திற்கான ஆணைக்குழுவின் ஊடகசந்திப்பின்போது, ஆணைக்குழுவின் சார்பில் பங்கேற்ற அருட்தந்தையர்கள் ஒருமித்து இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

மேலும் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் உரையாற்றும் எவருக்கும் அரசியல் சார்ந்த விடயங்களை பேசுவதற்கு அனுமதியளிக்கப்படாது என ஆணைக்குழுவின் தலைவர் அருட்சகோதரர். மங்களராஜா தெரிவித்துள்ளார்

நினைவேந்தல் நிகழ்வில் நாம் யாரையும் ஒதுக்கி வைக்கப்போவதில்லை எனவும் அரசியலுக்கு அப்பால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிற்றுரைகளை மேற்கொள்வதற்கு அனைவருக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More