Home இலங்கை கோத்தபாயவிற்கு பயந்தே 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவர முயற்சி…

கோத்தபாயவிற்கு பயந்தே 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவர முயற்சி…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்...

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என்ற அச்சம் காரணமாகவே நாடாளுமன்றத்திற்கு 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வரவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அனைவரும் கோத்தபாய ராஜபக்சவையே ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இது கட்சியினரின் கோரிக்கை இதனை கூற நாங்கள் பயப்படவில்லை. கோரிக்கை முன்வைக்கப்பட்டால், போட்டியிட தான் தயார் என கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார். இதனால், கோரிக்கையை முன்வைப்பது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர்களின் பொறுப்பு எனவும் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More