Home இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் சேதமடைந்த கோவில்கள் முழுமையாக புனரமைத்துக் கொடுக்கப்படும்

இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் சேதமடைந்த கோவில்கள் முழுமையாக புனரமைத்துக் கொடுக்கப்படும்

by admin

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக கடந்த மூன்று வருடகாலப் பகுதியில் யாழ். மாவட்டத்தில், இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் கோவில்கள எவையேனும் முழுமையாகவோ பகுதியளவிலோ சேதமடைந்திருந்தால், அவற்றை இராணுவத்தின் முழுமையான செலவில் புனரமைத்து வழங்கப்படும் என யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ். மாவட்டத்தில், போதிய வசதியற்ற மற்றும் வருமானம் குறைந்த கோவில்களின் புனர்நிர்மாண வேலைதிட்டத்தின் கீழ், மணல் மற்றும் சீமெந்து உதவிகோரிய ஆலயங்களுக்கு, அடுத்த வாரம் முதல் அவற்றைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் உதவி கோரிய கோவில்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகச் சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்தி;பபின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More