Home இந்தியா உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 9பேர் பலி

உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 9பேர் பலி

by admin


இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடியுடன் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகின்றமையினால் வீதிகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளதுடன் பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும் உள்ளது.

இந்நிலையில், உபியின் மேற்கு பகுதியில் உள்ள ஆக்ரா, பிரோசாபாத், அலிகார், மதுரா மற்றும் இடாவா நகரங்களில் பெய்த பலத்த மழை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுராவில் இடி தாக்கியதில் 3 பேரும், ஆக்ராவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒருவரும், இடாவா நகரில் 4 பேர் உள்பட மொத்தம் 9 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அம்மாநில முதலமைந்நர் யோகி ஆதித்யநாத், மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை விரைந்து வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More