87
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இஸ்ரேல் அரசாங்கப் படையினர் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டமாஸ்கஸின் கிழக்கு பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவைகள் மோசமான முறையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் கொலல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகுpறது.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சிரிய இராணுவ முகாமொன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் அவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love