Home சினிமா வடிவேலுவிடம் 9கோடி நஷ்ட ஈடு கோரத் திட்டம்

வடிவேலுவிடம் 9கோடி நஷ்ட ஈடு கோரத் திட்டம்

by admin


நடிகர் வடிவேலுவிடம் 9கோடி நஷ்ட ஈடு கொடுக்குமாறு 24ம் புலிகேசி படக்குழு கேட்டுள்ளது. 23ம் புலிகேசி படம் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை 24ம் புலிகேசி என்ற பெயரில் எடுக்க திட்டமிட்டனர்.  இயக்குனர் ஷங்கர் தயாரித்த இந்தப்படத்தினை சிம்புதேவன் இயக்கிய இந்தப் படத்தில் முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவே கதாநாயகனாக நடிக்க ஆரம்பிபத்திருந்தார்.  இந்தநிலையில் 10 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வடிவேலுவுக்கும், சிம்புத்தேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதையடுத்து வடிவேலு படத்தில் இருந்து விலகினார்

வடிவேலு படத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்பாடு செய்தது. இது குறித்து வடிவேலுவிடம் விளக்கம் கேட்க அவரோ, தான் எந்த பிரச்சனையும் செய்யவில்லை என்றும், படப்பிடிப்பை தொடங்க தாமதம் செய்ததால் தனக்கு பொருளாதார இழப்பும், மனஉளைச்சலும் ஏற்பட்டதாகவும், அதனால் படத்தில் நடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனால் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு முடங்கிப் போயுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் பேசியும் வடிவேலு அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.  இந்தநிலையில் 24ம் புலிகேசி படத்தை கைவிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றநிலையில் வடிவேலுவிடம் இருந்து 9 கோடி ரூபா நஷ்டஈடு வாங்கித் தருமாறு படக்குழு தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More