Home இலங்கை இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­படும் வரை இராணுவத்தின் குழி­க­ளில் விழவேண்டாம்..

இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­படும் வரை இராணுவத்தின் குழி­க­ளில் விழவேண்டாம்..

by admin

தமிழ் இளை­யோர்­கள் இரா­ணு­வத்­தில் இணை­யக் கூடாது. இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்ட பின்­னரே அது தொடர்­பில் பரி­சீ­லிக்க முடி­யும். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் தெரி­வித்­தார். வடக்கு இளை­யோர் இரா­ணு­வத்­தில் சேர வேண்­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட இரா­ணுவ கட்­ட­ளைத் தள­பதி கூறி­யி­ருந்­தார். அது தொடர்­பில்  கருத்து வெளியிட்ட அவர்

தற்­போது இலங்கை இரா­ணு­வம் சிங்­கள இரா­ணு­வம் போல உள்­ளது. முத­லில் இன­வி­கி­தா­சார அடிப்­ப­டை­யில் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டும். படை­யி­ன­ரு­டன் துணைப்­படை போல தமிழ் இளை­யோர் இணைந்து கொள்­வது என்­பது, எமது விடு­த­லைப் போராட்­டத்­துக்­கும், அதற்­காக உயிர்­து­றந்­த­வர்­க­ளுக்­கும் நாங்­கள் செய்­யும் துரோ­க­மா­கவே அமை­யும்.

எனவே இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­பட்டு எமது மண்­ணிலே நாங்­களே எங்­களை ஆள்­வ­தற்­குத் தீர்வு எட்­டப்­பட்ட பின்­னர், சிங்­க­ளப் படை என்­பது இலங்­கைப் படை என்று மாற்­றப்­பட்ட பின்­னர் இன­வி­கி­தா­கார அடிப்­படை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால் அதன்­பின்­னர் படை­யில் இணைந்­து­கொள்ள முடி­யுமே தவிர, இரா­ணு­வத் தள­ப­தி­யு­டைய அல்­லது எவ­ரு­டைய ஆசை வார்த்தைகளையும்  நம்பி அதில் இணை­யக்­கூ­டாது.

எமது கௌர­வம் துணைப்­ப­டை­யில் இணைந்­தால் பாதிக்­காது என்று உறு­திப்­ப­டுத்­தப்­ப­டும்­போ­து­தான் இணை­ய­வேண்­டும். அவ­ச­ரப்­பட்டு குழி­க­ளிலே விழ­வேண்­டாம்  என அவர் தெரிவித்துள்ளார்.“

ஆயுதங்களால் வெற்றிகொண்ட “பனங்காட்டை” புத்திக்கூர்மையால் தமதாக்கும்படையினர்…

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More