Home இலங்கை மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர் ஆட்ட நிர்ணய சதி

மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர் ஆட்ட நிர்ணய சதி

by admin


மற்றுமொரு இலங்கை கிரிக்கெட் வீரர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்களை அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற சிம்பாபே அணியுடனான தொடரின் போது இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதியில் குறித்த இலங்கை வீரர் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கையில் கடந்த 2016ஆம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் காலி விளையாட்டு மைதானத்தை மாற்றியமைப்பதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில், இலங்கையின் முன்னாள் வீரர்கள் மற்றும் மைதான முகாமையாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மற்றுமொரு ஆட்ட நிர்ண சதி குறித்த தகவல்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More