Home இலங்கை யுத்தம் காரணமாக சுற்றாடலுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

யுத்தம் காரணமாக சுற்றாடலுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


இலங்கையில் யுத்தம் காரணமாக சுற்றாடலுக்கு பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக மௌனமாக அழிவுகளை எதிர்நோக்கிய ஓர் விடயமாக இயற்கை காணப்படுகின்றது. யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்தி என்பனவற்றினால் நாட்டின் சுற்றுச் சுழலுக்கு பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெடிபொருட்கள் பயன்பாட்டினால் நாட்டின் இயற்கை வளங்களுக்கு பாரியளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக வன விலங்குகள் மற்றும் இயற்கைத் தாவரங்களுக்கு பாரியளவு அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும்; சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கில் அதிகளவில் இராணுவத்தினரது பிரசன்னம் காரணமாக விவசாய செய்கைகளுக்கு நீண்ட காலத்திற்கு தாக்கம் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளது. Action on Armed Violence (AOAV) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More