Home இலங்கை கோத்தாபய தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு விசாரணைக்கு வருகிறது….

கோத்தாபய தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு விசாரணைக்கு வருகிறது….

by admin


சர்ச்சைக்குறிய அவன்கார்ட் சம்பவம் தொடர்பில் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (31) விசாரணைக்கு வந்தது. இதன்போது இந்த மனுவை விசாரிப்பதில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி ஜனக் டி சில்வா தெரிவித்தார். அதன்படி அந்த வழக்கு இன்று வரை பிற்போடப்பட்டது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இந்த மனுவில் கூறியுள்ளதாவது, “எவன்கார்ட் மெரியட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டதாக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தான் உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கு இலஞ்ச ஊழல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், அதன் காரணமாக தான் உள்ளிட்ட 08 பிரதிவாதிகளை விடுவிக்குமாறும் விடுத்த கோரிக்கையை நீதவான் நீதிமன்ற நீதிபதி நிராகரித்து தீர்ப்பளித்ததாகவும், இதனால் அந்த தீர்ப்பை செல்லுபடியற்றதாக்க கோரி மேல் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யப்படது.

இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மறுஆய்வு மனுவை விசாரிக்காமல் மேல் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.  இந்நிலையில் கொழும்பு நீதவான் நீதிமன்றின் தீர்ப்பு மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்றும் தான் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.”  இந்த மனுவே நேற்றைய தினம் விசாரணைக்கு வந்ததுடன், வழக்கை இன்று வரை பிற்போடுவதற்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More