Home இலங்கை முல்லைத்தீவில் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க ஒரு சந்திப்பு….

முல்லைத்தீவில் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுக்க ஒரு சந்திப்பு….

by admin

வடமாகாண சபை உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடுகிறார்கள்..

முல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை பேரவை செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 4ம் திகதி மாலை 4 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் குறித்து அவை தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் கடந்த 4ஆம் மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு சென்று நிலமைகளை நேரில் பார்வையிட்டிருந்தனர்.

இதனடிப்படையில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கான  அழுத்தத்தை மத்திய அரசாங்கத்திற்கு கொடுப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்களும், வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் திட்டமிட்டபடி சந்திப்பு இடம்பெறவில்லை. அதனடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட சந்திப்பு எதிர்வரும் 4ம் திகதி மாலை 4 மணிக்கு வடமா காணசபை பேரவை செயலக மண்டபத்தில் நடைபெறும்.

இந்த சந்திப்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதே போல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவேண்டும் என அவை தலைவர் கோரியிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More