Home இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர் சிசிலி தீவுகளில் கைது…

சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர் சிசிலி தீவுகளில் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்கள் சிசிலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலிய ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிலியில் வைத்து போலி ஆவணங்களுடன் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, அவர்கள் வழங்கிய தகவல்கள் மூலம்,  இந்த இல்ஙகையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த  ஆறு இலங்கையர்களும், இலங்கையிலிருந்து சிசிலி தீவுகளுக்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்டமை  விசாரணைகளின் போது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும்   சிசிலி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More