Home உலகம் உரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை…

உரிய ஆவணமின்றி, எல்லை தாண்டிய கர்பிணிப் பசுவிற்கு மரண தண்டனை…

by admin

பல்கேரியாவை சேர்ந்த கர்ப்பிணி பசு ஒன்று ஐரோப்பிய ஒன்றிய எல்லையை தாண்டி செர்பியாவுக்குள் சென்றதால் அந்த பசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா அமைந்துள்ள நிலையில் பல்கேரிய எல்லைப் பகுதியில் உள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, எல்லைத் தாண்டி, செர்பியாவிற்குள் நுழைந்துள்ளது.

செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு என்கின்ற நிலையில் ஐரோப்பிய ஆணைய வழிகாட்டுதலின் படி, உரிய ஆவணமின்றி எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும்.

இந்தவகையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு, மரண தண்டனை விதித்துள்ளனர அந்த பசு தற்போது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளநிலையில் பென்காவிற்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More