Home இலங்கை வல்வெட்டித்துறைப் பகுதியில் குழு மோதல் ஒரே இரவில் 15 பேர் கைது..

வல்வெட்டித்துறைப் பகுதியில் குழு மோதல் ஒரே இரவில் 15 பேர் கைது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வல்வெட்டித்துறை பகுதியில் குழு மோதலில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் ஒரே இரவில் 15 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். குழு மோதலில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்திலையே அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது கைக்கலப்பாக மாறியது. அதன் போது இரு குழுக்களையும் சேர்ந்த 15 பேர் காயமடைந்த நிலையில் ஊரணி , மந்திகை மற்றும் யாழ்.போதனா வைத்திய சாலைகளில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை காவற்துறையினர் மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஆறு பேரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை கடந்த திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்கள். அவர்கள் ஆறு பேரையும் எதிர்வரும்ம் 21 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அந்நிலையில் குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வல்வெட்டித்துறை காவற்துறையினர் நேற்றைய தினம் இரவு செவ்வாய்க்கிழமை அதிரடி நடவடிக்கையாக 15 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யபட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிசார் விசாரணைகளில் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More