Home இலங்கை யாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்

யாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழில்.ஊடகவியலாளர் ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி உள்ளார் என கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான த. வசந்தரூபன் என்பவரை இன்று காலை இனம் தெரியாத நபர் ஒருவர் இடைமறித்து இணையத்தளத்தில் பதிவேற்றி உள்ள செய்தி ஒன்றினை அகற்றகோரியுள்ளார்.

அதற்கு தனக்கும் அந்த இணையத்திற்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார். அதனை அடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More