Home இலங்கை 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிக நன்மை மஹிந்தவிற்கே

20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிக நன்மை மஹிந்தவிற்கே

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிக நன்மைகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கே கிடைக்கும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டால் பிரதமரே அந்தப் பதவியை ஏற்றுக்கொள்வார் என தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகினால் அவரால் ஜனாதிபதியாக முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் மஹிந்த ராஜபக்ஸ பலம்பொருந்திய பிரதமராக நியமிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More