Home இலங்கை இணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்

இணைப்பு 2 – மல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு – அப்பகுதியில் பதட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மல்லாகம் பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். தற்போது இளைஞனின் உடல் தெல்லிப்பளை வைத்திய சாலையில் வைக்கப்பட்டு உள்ளது. அந்நிலையில் மல்லாகம் ஏழாலை மற்றும் தெல்லிப்பளை வைத்திய சாலை சூழலில் பெருமளவான இளைஞர்கள் கூடியுள்ளதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகின்றது.

அதேவேளை யாழ்.மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர் பதட்டமான சூழல் நிலவும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஏழாலை மற்றும் குளமன்காடு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குழுக்களுக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.

மல்லாகத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் படுகாயம்

: Jun 17, 2018 @ 14:51


யாழ்.மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஏழாலையை சேர்ந்த சுதர்சன் (வயது 25) எனும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

குறித்த பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு உள்ளது. மோதல் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்த வேளை காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டு உள்ளது.அதனை அடுத்து காவல்துறையினர்; மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More