Home பிரதான செய்திகள் சம நேரத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி

சம நேரத்தில் பல திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி

by admin

தமிழ் சினிமாவில் தனக்கு என ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகை அஞ்சலி  மீண்டும் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வரும் அஞ்சலி ஒரே தடைவையில் மூன்று பேய்ப் படங்களிலும் நடிக்கிறார். அஞ்சலி இறுதியாக விஜய் ஆண்டனி ஜோடியாக `காளி’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் `பேரன்பு’ மற்றும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக `நாடோடிகள்-2′ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக இருக்கின்றன. இதனைத் தவிரவும் `காண்பது பொய்’, 3டி-யில் உருவாகும் `லிசா’ என்ற பேய் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். அண்மையில் விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில், தெலுங்கில் அஞ்சலி இரு வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற கீதாஞ்சலி என்னும் பேய் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன்மூலம் `லிசா’, `ஓ’ மற்றும் `கீதாஞ்சலி-2′ என ஒரே நேரத்தில் மூன்று பேய் படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More