Home இந்தியா சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி மனு தாக்கல்

சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை வேறு நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி மனு தாக்கல்

by admin

சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து இருந்து வேறு மாநில உயர்நீதிமன்றத்துக்கோ அல்லது உச்சநீதிமன்றத்துக்கோ மாற்றக்கோரி தினகரன் ஆதரவாளர்கள் 17 பேர் உச்சநீதிமன்றில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனி சாமியை நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆளுனரிடம் மனு கொடுத்தனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் ப.தனபாலிடம் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு கோரி அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் அழைப்பாணை அனுப்பியிருந்தார்.

இதில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் முன்னிலையாகி விளக்கமளிக்காத காரணத்தினால் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர் . இதனை எதிர்த்து குறித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்தனைத் தொடர்ந்து 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் கடந்த 14ம் திகதி இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தநிலையில் நீதிமன்றில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால் வழக்கினை வேறு நீதிமன்றுக்கு மாற்றி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் எனக்கு குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More