Home இந்தியா அரியானா மாநிலம் பானிபட், அரச மருத்துவமனையில் மின் தடை – குழந்தைகள் இருவர் பலி…

அரியானா மாநிலம் பானிபட், அரச மருத்துவமனையில் மின் தடை – குழந்தைகள் இருவர் பலி…

by admin


அரியானா மாநிலம் பானிபட் பகுதியில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் நேற்றையதினம் ஏற்பட்ட மின்தடை காரணமாக இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை காரணமாக அங்கு சிகிச்சை பெற்றுவந்த இரண்டு குழந்தைகள் நிலைமை மோசமடைந்ததையடுத்து அவர்களை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் அம்புலன்சில் கொண்டு செல்லும் வழியிலேயே இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் நான்கு குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  மின்தடை ஏற்படவில்லை எனவும், வோல்டேஜ் குறைபாடினால் குளிரூட்டி மற்றும் மருத்துவ உபகரணங்கள் செயல்படாமல் போனதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More