Home இலங்கை ராமேஸ்வரம் கடற்பரப்புக்குள் மன்னார் பகுதி சகாயபஸ்திபன் கைது…

ராமேஸ்வரம் கடற்பரப்புக்குள் மன்னார் பகுதி சகாயபஸ்திபன் கைது…

by admin

ராமேஸ்வரம் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் சென்ற இலங்கையர் ஒருவரை பைபர்படகுடன் கைதுசெய்துள்ளதாக ராமேஸ்வரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சகாயபஸ்திபன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் கடற்பகுதியில் உள்ள உச்சிபுளி அருகே வலாங்காபுரி கடற்கரைப்பகுதியில் வைத்து குறித்த நபரை கைதுசெய்த ராமேஸ்வரம் காவல்துறையினர் அவர் பயணம் மேற்கொண்ட பைபர் படகையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்தவரா அல்லது ரமேஸ்வரத்திலிருந்து அகதிகளை ஏற்றிச் செல்ல வந்துள்ளாரா என்பது குறித்து ராமேஸ்வரம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More