Home இந்தியா கேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க முடிவு.

கேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க முடிவு.

by admin


கேரளாவில் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாற்று பாலினத்தவர்களுக்கு என பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதன் ஒருபகுதியாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கல்வி கற்கும் மாற்று பாலினத்தவர்களுக்கு உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதிகளை அமைத்துக்கொடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

மாற்று பாலினத்தவர்களுக்கு என ‘சமன்வாயா’ எனும் சிறப்பு கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இந்தத்திட்டத்தில் இணைவோருக்கு, முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த தங்கும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளன.

‘தங்கும் விடுதி அல்லது வாடகை வீடுகள் போன்றவைகளில் வசிக்க மூன்றாம் பாலினத்தவர்கள் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் கல்வி பயில ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, உணவும் தங்கும் இடமும் அவர்கள் கல்வி கற்க ஒரு தடையாக இருக்க கூடாது என்பதால் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது” என அம்மாநில கல்வித்துறை இயக்குனர் பி.எஸ்.ஸ்ரீகலா தெரிவித்துள்ளார்.

சிறப்பு கல்வி திட்டத்தின் கீழ் நான்காம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் , 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1,250 ரூபாய உதவித்தொகையாக வழங்கப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More