Home இலங்கை “நாம் இனி அந்தப்பக்கம் சொல்லப்போவிதில்லை இரண்டு கால்களும் மகிந்தவிடமே”

“நாம் இனி அந்தப்பக்கம் சொல்லப்போவிதில்லை இரண்டு கால்களும் மகிந்தவிடமே”

by admin

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தலை­மையில் இடம்­பெறும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­தி­ய ­குழு உள்­ளிட்ட சகல குழுக் கூட்­டங்­க­ளையும் நிரா­க­ரித்து தாம் மஹிந்த ராஜபக்ஷவுடன் மாத்­திரம் இணைந்து செயற்­ப­ட­வுள்ளதாகவும்,  இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா­தீன அணி­யினர் இல்லை எனவும், 16 பேர் அணியினர்  தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சுயா ­தீன அணி­யினர் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணி­யி­னரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தனர். முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ மற்றும் ஜீ.எல்.பீரிஸ் உள்­ளிட்ட பொது­ஜன முன்­னணி உறுப்பினர்களைச் சந்­தித்­தனர். இச் சந்­திப்பு குறித்து வின­விய போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  ஜோன் சென­வி­ரத்ன தெரிவிக்­கையில்,

“இந்த ஆட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் எமக்கும் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்குமிடையில் விரிசல் நிலை­மைகள் ஏற்பட்டன. பிர­தான செயற்­பா­டு­களில் நாம் முரண்­ப­டக்­கூ­டிய நிலை­மைகள் ஏற்­பட்­டன. எனினும் இச் சந்­திப்பின் மூல­மாக இரு தரப்­பி­னரும் இணைந்து செயற்­ப­டக்­கூ­டி­யதும் அடுத்தகட்டப் பயணம் ஒன்­றினை தெளி­வாக முன்­னெ­டுக்­கவும் கூடி­ய­தாக அமைந்­துள்­ளது. அடுத்தகட்­ட­மாக நாம் இரு தரப்­பி­னரும் பொது­வான வேலைத்­திட்டம் ஒன்றின் கீழ் செயற்­படத் தீர்­மானம் எடுத்­துள்ளோம்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறிசே­ன­வுடன் இணைந்து அர­சாங்­கத்திலிருந்த நேரத்தில் எமது இரு தரப்­பி­ன­ரையும் இணைக்கும் செயற்­பா­டு­க­ளையும் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தி தீர்­வு­களை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்தோம். எனினும் அவை இரண்­டுமே முடி­யாமல் போயுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து எம்மால் ஒரு­போதும் பய­ணிக்க முடி­யாது என்­பது குறு­கிய காலத்திலேயே தெரிந்­து­விட்­டது.

ஆகவே நாம் அர­சாங்­கத்திலிருந்து வெளி­யேறி எதி­ர­ணியில் இணைந்­து­கொண்டோம். நாம் எதிர்க்­கட்­சிக்கு வந்­த­வுடன் இரு தோணிகளில் கால் வைக்கும் செயற்பாடுகளை முன்­னெ­டுக்­க­வில்லை. இரு கால்­க­ளையும் எதிர்க்­கட்சியின் பக்­கமே வைத்துள்ளோம்.”  “நாம் அந்­தப்­பக்­கமும் உள்ளோம் – இந்தப் பக்­கமும் உள்ளோம் – ஜனா­தி­ப­தி­யு­டனும் செயற்­ப­டு­கின்றோம் – மஹிந்த அணி­யு­டனும் உள்ளோம்” போன்ற கருத்­துக்களை முன்­வைப்­பது தவ­றா­னது. நாம் இனி அந்தப் பக்கம் செல்லப்போவதில்லை. மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்தே அடுத்தகட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More