Home இலங்கை பாரிய அவதூறை ஏற்படுத்திய நியுயோர்க் டைம்ஸிற்கு எதிராக சட்டநடவடிக்கை…

பாரிய அவதூறை ஏற்படுத்திய நியுயோர்க் டைம்ஸிற்கு எதிராக சட்டநடவடிக்கை…

by admin

நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சீனா நிறுவனங்களிடமிருந்து பணம் பெற்றார் என நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு பாரிய அவதூறை ஏற்படுத்தும் விதத்திலான அந்த தகவல்களில் சிறிதளவும் உண்மையில்லை என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, தனது சட்டத்தரணிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக நியுயோர்க் டைம்ஸில் வெளியான குறிப்பிட்ட கட்டுரை, அரசியல்நோக்கங்களை கொண்டது எனவும், இலங்கையில் உள்ள சில தரப்பினர் அதனை புகுத்தியுள்ளனர் எனவும் மகிந்த ராஜபக்ச கூட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More