Home இலங்கை 500 வது நாளில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம்…

500 வது நாளில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்று (01.07.18) 500ஆவது  நாளை எட்டியுள்ளது.

கடந்த 20-02-2017 அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வு இன்றி 500 வது நாளை எட்டியுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் வடக்கு கிழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

சர்வதேசமே எமக்கு உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லை, ஜநாவே எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை உறுதிசெய், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலை வெளியிடு, 500 வது நாளில் ஏழு அம்மாக்கள் இறந்துள்ளனர், சர்வதேசமே இலங்கை அரசு சர்வதேசத்திற்கு ஒன்று, எங்களுக்கு ஒன்று, கூறி ஏமாற்றுவது உங்களுக்கு புரியவில்லையா?, ஜநாவே பன்னாட்டு தலையீட்டுடனான நீதி பொறிமுறையே எமது தேவை, சர்வதேசமே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More