Home இலங்கை காங்கேசன்துறையில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை(படங்கள் இணைப்பு )

காங்கேசன்துறையில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை(படங்கள் இணைப்பு )

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மல்லாகம் சந்தியில் உள்ள காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த என்.நஸிர் (வயது 25) எனும் காவல்துறை உத்தியோகஸ்தரே தற்கொலை செய்து கொண்டவராவார். குறித்த உத்தியோகஸ்தர் இன்று காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை திடீரென தனது  AK  47 ரக துப்பாக்கியால் நெஞ்சு பகுதியில் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More