Home இலங்கை மகிந்தவுடன் மாகாண சபை உறுப்பினர்கள் – மொட்டவிழ்க்க வருகிறார் கோத்தா…

மகிந்தவுடன் மாகாண சபை உறுப்பினர்கள் – மொட்டவிழ்க்க வருகிறார் கோத்தா…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் மாகாண சபை உறுப்பினர்கள் இன்று அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களுக்கு அங்கத்துவ அட்டைகளை வழங்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் முதல் முறையாக இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்திற்கு வரவுள்ளார். அரசியல் நடவடிக்கையில் முதல் முறையாக பங்கேற்கும் கோத்தபாய ராஜபக்ச பொதுஜன முன்னணியில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பதவிக்காலம் முடிந்துள்ள மூன்று மாகாண சபைகள் உட்பட 9 மாகாண சபைகளை சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 90 வீதமான உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள உள்ளனர். அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள வருமாறு அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More