Home இலங்கை யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறை ஏற்பாட்டில் நடைபெறும் நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

யாழ் பல்கலைக்கழக நுண்கலைத் துறை ஏற்பாட்டில் நடைபெறும் நாடக விழாவுக்கு ஜனாதிபதி நிதி அன்பளிப்பு

by admin

யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையும், ‘வெறுவெளி அரங்கக் குழுவும்’ இணைந்து ஏற்பாடு செய்யும் நாடக விழாவுக்கான செலவினை பெற்றுத்தருமாறு நுண்கலைத்துறை மாணவர்கள் ஜனாதிபதியை கோரியதன் பேரில் அந்நிதியினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அன்பளிப்பு செய்துள்ளார்.  இதற்கான காசோலையினை கையளிக்கும் நிகழ்வு நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

நுண்கலைத் துறையின் வெறுவெளி அரங்கக் குழுவின் தலைவரும் நுண்கலைத் துறையின் மாணவனுமாகிய திரு ச. சுஜீவன் அவர்களிடம் இதற்கான காசோலையினை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.  யாழ்ப்பாண பல்கலைக்கழக்தின் நுண்கலைத் துறையின் விரிவுரையாளர் கலாநிதி க.ரதிதரன மற்றும் ; ஜனாதிபதியின் கலைச் செயற்பாடுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் தர்மசிறி பண்டாரநாயக்க ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More