Home இலங்கை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி – யாழ் இந்து மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி – யாழ் இந்து மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்

by admin


யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம் முறை பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதித்து வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளார். அத்துடன் இவர் பங்குபற்றிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தினை Team work   இற்காக பெற்றுக் கொண்டுள்ளது.

அத்துடன் இப் போட்டிக்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இவர்
2013- பிலிப்பைன்ஸ்,
2014- இந்தோனேஷியா,
2015- சீனா

என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ளி பதக்கமும் வென்றிருந்தார். அத்துடன் இவர் கல்லூரி சாரணர் செயற்பாடுகளிலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றனை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More