Home இலங்கை தமிழகஅகதிகள் முகாம்களில் வசிக்கும் 4,000 தமிழர்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர்…

தமிழகஅகதிகள் முகாம்களில் வசிக்கும் 4,000 தமிழர்கள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர்…

by admin

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 4,000 பேரை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாஜக வின் சிரேஸ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக இடமட்பெயர்ந்து தமிழகம் சென்றவர்கள் அங்கு 245 முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர்

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 107 முகாம்களில் 61 ஆயிரத்து 422 அகதிகள் வசிக்கின்றதுடன் 35 ஆயிரத்து 316 அகதிகள் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

மேலும் 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரி வித்தார்.

இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வெளிவிவகாரத் துறை அமைச்சகத்துக்கு தான் எழுதிய கடிதத்துக்கு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்பேரில் முதற்கட்டமாக 4,000 இலங்கை தமிழர்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இது குறித்து இலங்கை அரசுக்கு, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு திரும்பும் இலங்கை தமிழர்களை மீள்குடியேற்ற இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More