Home உலகம் ஜப்பானில் மருந்தில் விசம் கலந்து கொடுத்து 20 பேரை கொன்ற தாதி

ஜப்பானில் மருந்தில் விசம் கலந்து கொடுத்து 20 பேரை கொன்ற தாதி

by admin


ஜப்பானில் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய தாதி ஒருவர் மருந்தில் விசம் கலந்து கொடுத்து 20 பேரைக் கொலை செய்துள்ளார்.

31 வயதான அய்யூமி குபோகி (Ayumi Kuboki) என்னும் தாதியே இவ்வாறு நோயாளிகளுக்கு விசம் கலந்து கொன்றுள்ளார். குறித்த தாதி 2016 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து விட்டு திடீரென வேலையிலிருந்து விலகியுள்ளார். எனினும் அவர் பணியாற்றிய காலத்தில் 88 வயது முதியவர் ஒருவருக்கு குளுக்கோசில் விஷம் கலந்து செலுத்தி அவரை கொலை செய்தமை தெரிய வந்துள்ளதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதன்போது குற்றத்தினை ஒப்புக் கொண்ட அவர் இதுவரை 20 நோயாளிகளை இவ்வாறு மருந்தில் விசம் கலந்து கொன்றதாக தெரிவித்துள்ளார். அதிகம் தொல்லை கொடுக்கும் நோயாளிகளை இவ்வாறு கொன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More