Home உலகம் இணைப்பு2 – நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

இணைப்பு2 – நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

by admin

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப், அவரது மகள் மர்யம் நவாஸ்  மருமகன்  கப்ரின்  சப்தர்  ஆகியோரின் பிணை  மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று

Jul 17, 2018 @ 03:21

பனாமா ஊழல் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுக்கள் மீது இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை நவாஸ் ஷெரிப், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன்  கப்ரின்  சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் சட்டக் குறைபாடுகள் உள்ளதால், அந்தத் தீர்ப்பை ரத்து செய்யுமாறு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றில் நேற்று 7 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அம்மனுக்கள் மீதான விசாரணை ; இன்று விசாரணைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More