Home இலங்கை முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிக்குள் ஒரு வருடத்தின் பின் கால் பதித்த மக்கள் (படம்)

முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட காணிக்குள் ஒரு வருடத்தின் பின் கால் பதித்த மக்கள் (படம்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்குள் சுமார் ஒரு வருடங்களின் பின் இன்று புதன் கிழமை(18) காலை மக்கள் கால் பதித்துள்ளனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் பல வருடங்களாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய மலங்காடு உட்பட மாவட்டத்தின் பல பாகங்களிலும் வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வருடம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி முதல் முள்ளிக்குளம் கிராமத்திற்கான நுழை வாயிலில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சுமார் 38 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் மக்களின் காணிகள் உரிய காலத்தில் விடுவிக்கப்படும் என கடற்படை அதிகாரிகளினால் உறுதிமொழி வழங்கப்பட்ட நிலையில் மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.

இதனையடுத்து கடந்த வருடம் மே மாதம் 3 ஆம் திகதி முள்ளிக்குளம் மக்களின் நூறு ஏக்கர் காணியை விடுவிப்பதாக அறிவித்த கடற்படையினர் குறிப்பிட்ட சில இடங்களுக்குள் மட்டுமே மக்களை நடமாட கடற்படை அனுமதித்திருந்தனர்.

எனைய காணிகள் காணி அளவீடு செய்யப்பட்டு பின் மக்கள் குடியேற்றம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு ஒரு வருடங்களை கடந்த நிலையிலும்,அதிகாரிகளும்,அரசியல் வாதிகளும் தமது காணிகளில் குடியேற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத போதும் முள்ளிக்குளம் மக்கள் ஒன்றிணைந்து கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் சென்று தற்காலிக கூடாரங்களை அமைத்து வருவதுடன் காணிகளை துப்பரவு செய்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More