Home இலங்கை “ஆவாக்கள்” “போதைகள்” “நுண் கடன்கள்” “புத்தர் சிலைகள்” கூடவே தெற்கில் இருந்து யானைகளும்….

“ஆவாக்கள்” “போதைகள்” “நுண் கடன்கள்” “புத்தர் சிலைகள்” கூடவே தெற்கில் இருந்து யானைகளும்….

by admin

ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் மீண்டும் யானைகளின் அட்டகாசம் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகளால் பல்வேறு பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர் இந்த விடயம் போல்வேறு தரப்பினரிடம் தெரிவிக்கப்பட்டாலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை

இந்த நிலையில் ஒட்டுசுட்டான் மான்குளம் வீதியில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசத்தால் வீதியில் செல்லும் மக்கள் அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளது பகல் வேலைகளிலேயே வீதியோரத்தில் யானைகள் நடமாடுவதாகவும் இதனால் வீதியால் பயணிக்கும் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

இந்த யானைகள் தென்பகுதியில் இருந்து கொண்டுவந்து விடப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு தொகையாக யானைகள் இங்கு இருக்கவில்லை எனவும் காட்டு யானைகள் விரட்டினால் போய்விடும் எனவும், இவை விரட்டினாலும் செல்வதில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

இந்த யானைகள் கொண்டுவந்து விடப்பட்டமையை அண்மையில் மக்கள் வடமாகாண முதலமைச்சரிடமும் சுட்டிக்காட்டியிருந்தனர் எனவே அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனமெடுக்க வேண்டுமெனவும் இந்நிலைகளுக்கு தீர்வு காணுமாறும் கோருகின்றனர்.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More