Home உலகம் பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்

பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பம்

by admin

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 342 பேரில் 272 பேர் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏனைய 70 பேர் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.  எனவே ஆட்சியை கைப்பற்ற ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ 172 இடங்களில் வெற்றிபெறவேண்டும். அந்தவகையில் 272 பாராளுமன்ற தொகுதிகளுக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துன்க்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.

பாகிஸ்தான் முழுவதும் மொத்தம் 10 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் பாராளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாராளுமன்றத் தேர்தலில் ஏராளமான கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரீக் இ- இன்சாப், மறைந்த பிரதமர் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி உள்ளது.

வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள நிலையில் . வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More