Home இந்தியா பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள அரசிற்கு உத்தரவு :

பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள அரசிற்கு உத்தரவு :

by admin

பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை மத போதகர்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கேரள அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் தனது திருமண வாழ்வுக்கு முன்னதாக நடந்த தவறு குறித்து பாவமன்னிப்பு கேட்பதற்காக சென்ற பெண்ணை போதகர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளமை தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலம் கோரப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் மூலம் வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவம் தொடர்பில் மத போதகர்கள் மீது குற்றவழக்குகள் பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போதகர்களின் பிணை மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 6-ம் திகதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் குற்றம்சாட்டப்பட்டுள்ள போதகர்களான ஜோர்ஜ் மற்றும் சோனி வர்க்கீஸ் ஆகியோரை கைது செய்யவும் தடை விதித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More