Home இலங்கை இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளைஆளுநர் குரே பார்வையிட்டார் (படங்கள்)

இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளைஆளுநர் குரே பார்வையிட்டார் (படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று(26) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2190.39 நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரணைமடு குளத்தின் பிரதான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளத்தின் அணைக்கட்டு உயர்த்தல், வான் கதவுகள் புதிதாக அமைத்தல் மற்றும் புனரமைத்தல், அணைக்கட்டின் உட்பகுதி புனரமைப்பு, புதிய மேம்பாலம் அமைத்தல், நீர் தடுப்பு அணைக்கட்டு அமைத்தல் உட்பட பல பணிகள் இடம்பெற்று பூர்த்தியாகும் நிலையில் காணப்படுகின்றன.

இந்த அபிவிருத்திப் பணிகளையே ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் ஆளுநருடன் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் சுந்தரம் டிவகல்லா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்,   ஆகியோரும் சென்றிருந்தனர்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த ஆளுநர் றெஜினோல்ட் குரே அடுத்துவரும் மாதங்களில் இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகள் நிறைவுபெறவுள்ளது. இதன் பின்னர் இந்த குளத்திலிருந்து விவசாயிகள் அதிகளவான நன்மைகளை பெறுவதோடு யாழ்ப்பாணத்திற்கும் குடிநீர் விநியோகிப்படும் எனவும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் பொறியியலாளர் வே பிறேமகுமார் அவர்கள் இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கு விளக்கமறித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More