Home இலங்கை அரசாங்கம் முன்வைத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை தோல்வி அடைந்துள்ளது…

அரசாங்கம் முன்வைத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை தோல்வி அடைந்துள்ளது…

by admin


அரசாங்கம் முன்வைத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். இந்த முறையினால் உள்ளூராட்சி சபைகளில் பல்வேறு சிக்கல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது கருத்து வெளியிட்ட அவர், மாகாண சபை தேர்தலிலும் இதே முறை முன்வைக்கப்பட்டால் நாட்டில் ஆட்சி சீர்குலையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புதிய தேர்தல் முறை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கட்சித்தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More