Home இந்தியா கருணாநிதி தைரியமானவர்- நலமாக இருக்கிறார் – நலம் விசாரித்த பின்னர் ராகுல் காந்தி :

கருணாநிதி தைரியமானவர்- நலமாக இருக்கிறார் – நலம் விசாரித்த பின்னர் ராகுல் காந்தி :

by admin

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை சந்தித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கலைஞர் கருணாநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீரடைந்து இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க இன்று வருகை தந்தார். இதன்போது ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என கூறினார். இதேவேளை கருணாநிதிக்கு மேலும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More