Home இந்தியாஉச்ச நீதிமன்றின் முன்னாள் நீதிபதி லோயா மரணம் – சீராய்வு மனுவும் தள்ளுபடி :

உச்ச நீதிமன்றின் முன்னாள் நீதிபதி லோயா மரணம் – சீராய்வு மனுவும் தள்ளுபடி :

by admin


உச்ச நீதிமன்றின் முன்னாள் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மறுவிசாரணைக்கு உத்தரவிடுமாறு மும்பை சட்டத்தரணிகள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.  கடந்த 2005-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சொராபுதின் ஷேக் உள்பட 3 பேரை போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக்கொன்றதாக தற்போதைய பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் காவற்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை, மும்பை சி.பி.ஐ. நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில் வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா, 2014ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் நீடிப்பதால் இதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி லோயா மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்த கூடாது என மகாராஷ்டிரா மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை நடைபெற்று வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பதாகவும், மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணத்தில் சுதந்திரமான விசாரணைக்கு அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றில் மும்பையை சேர்ந்த சட்டத்தரணிகள் கடந்த மேமாதம் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரின் அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது, மறுவிசாரணைக்கு உத்தரவிட நீதிபதிகள் மறுத்து மனுவை தள்ளுபடி செய்தனர்..

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More