Home இந்தியா தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையக மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையக மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

by admin

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையகத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று நிறைவேறியுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையகம் கொண்டு வரப்பட்ட போதும் இந்த ஆணையகத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்கப்படாமல் இருந்து வந்தது.

மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் ஆணையகம் பரிந்துரைகளை வழங்கினாலும், அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அந்த பரிந்துரைகளும் ஏற்கப்படவில்லை.இந்நிலையில், இந்த ஆணையகத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 2-ம் திகதி எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது 156 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதனால் மசோதா எதிர்ப்பின்றி நிறைவேறியுள்ளது. அடுத்து ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் இந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையகத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More