Home உலகம் பாகிஸ்தான் பிரதமராக, இம்ரான்கான் பதவி ஏற்பதில், நிச்சயமற்ற நிலை தொடர்கிறது…

பாகிஸ்தான் பிரதமராக, இம்ரான்கான் பதவி ஏற்பதில், நிச்சயமற்ற நிலை தொடர்கிறது…

by admin

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் நிச்சயமற்ற நிலை தொடர்வதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 25-ந் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

கிரிக்கெட் வீரராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய 65 வயதுடைய இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்து, சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று கூட்டணி அரசு அமைக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டது.

தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள இம்ரான்கான் எப்போது பதவி ஏற்பார் என்பதில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. முன்னதாக அவர் 14 அல்லது 15-ந் திகதி பதவி ஏற்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அந்த நாட்டின் தேர்தல் ஆணையகம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையகம் நிறுத்தி வைத்து உள்ளது. இதன் காரணமாக இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான பலுசிஸ்தான் அவாமி லீக் கட்சியின் பலமும் 4 என்ற எண்ணிக்கையில் இருந்து 3 ஆக குறைந்து இருக்கிறது. நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள 9 நாடாளுமன்ற தொகுதி முடிவுகளில், இம்ரான்கான் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளும் அடங்கும்.

இம்ரான்கான் வெற்றி பெற்று உள்ள எஞ்சிய 3 தொகுதிகளின் முடிவுகளும் நிபந்தனையின் கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இம்ரான்கான் மீது தொடரப்பட்டு உள்ள வழக்குகளின் முடிவுக்கு கட்டுப்பட்டதாகும்.

மேலும், இம்ரான்கான் தேர்தல் வெற்றியில் 2 தொகுதிகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதும், எஞ்சிய 3 தொகுதிகளின் முடிவுகள் நிபந்தனைக்கு உட்பட்டது என்பதும் அவர் பிரதமர் பதவியை ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படு கிறது.

அத்துடன் இம்ரான்கான் கட்சியின் பலம் 116-ல் இருந்து 112 ஆக குறைந்து இருப்பதுவும் பிரச்சினைக்கு உரியதாக அமைந்து உள்ளதென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More