Home இலங்கை கிளிநொச்சியில் இராணுவ கனகரக வாகனம் மோதியதில் ஒருவர் பலி

கிளிநொச்சியில் இராணுவ கனகரக வாகனம் மோதியதில் ஒருவர் பலி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இராணுவத்தினரின் கனகரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கிளிநொச்சியிலிருந்து இரணைமடு திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதே திசையில் சென்ற இராணுவத்தினரின் கனகரக வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான க.குகனேஸ்வரன் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிலமணிநேரம் அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More