Home உலகம் அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி – 10 பேர் காயம்

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி – 10 பேர் காயம்

by admin


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். புளோரிடாவின் செயின்ட் ஜோன்ஸ் ஆற்றின் அருகே உள்ள பகுதியொன்றில்  பொழுதுபோக்கிற்கான பொது இடம் ஒன்றில் வீடியோ கேம் போட்டி நடத்தப்பட்ட போது இனந்தெரியாத நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் துப்பாக்கிதாரி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்ததாகவும் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பும் இதேபகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More