Home இலங்கை அச்சுவேலியில் இராணுவத்தின் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிப்பு!

அச்சுவேலியில் இராணுவத்தின் வசமிருந்த 2 ஏக்கர் காணி விடுவிப்பு!

by admin


யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர்களான ஆறு குடும்பங்களிடம் இராணுவத்தினர் காணியை கையளித்துள்ளனர்.

1995இல் வலிகாம இடப்பெயர்வுடன் குறித்த காணிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. தமது காணிகளை விடுவிக்கக்கோரி இக் காணி உரிமையாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். எனினும் நான்கு வருடங்களின் பின்னர் இக் காணி உரிமையாளர்களு்ககு கையளிக்கப்பட்டுள்ளது. தமது காணிகளை விடுவிக்குமாறு 2014ஆம் ஆண்டில் இருந்து காணிகளின் உரிமையாளர்கள் போராட்டங்களையும், அழுத்தங்களையும் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது..

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More