Home இந்தியா அரச பணத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியமை தொடர்பில் பா.ஜ. கவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி :

அரச பணத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியமை தொடர்பில் பா.ஜ. கவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி :

by admin


அரச பணத்தை விளம்பரத்துக்கு செலவு செய்தது தொடர்பான முறைப்பாடு குறித்து 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு பா.ஜ.க.வுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர் சஞ்சீவ்ஷா டெல்லி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில், ‘பாரதிய ஜனதா கட்சியும், அக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் அரச பணத்தை கட்சி வளர்ச்சிக்கும், பிரசாரத்துக்கும் பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்க் கண்ட் மாநிலங்களில் அரசு பணம் தவறாக செலவிடப்படுகிறது எனவும் ; அரசு விளம்பரங்களில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் குற்றம் சுமததினர்.

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட வி;டயம் குறித்து குற்றம் சாட்டப்பட்ட மாநில அரசுகளையும், பா.ஜ,க. அரசினையும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More