Home இலங்கை வட மாகாண சபை உறுப்பினரின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை…

வட மாகாண சபை உறுப்பினரின் செயலாளரை வீதியில் வழிமறித்து ரி.ஐ.டி விசாரணை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரது செயலாளர் இலங்கை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் (ரிஐடி) வீதியில் தடுத்து நிறுத்தி விசாரணை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் செயலாளர் கனகலிங்கம் சிறிமதன் அவர்களை வவுனியா, குடியிருப்பு பகுதியில் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ஏழு மணியளவில் இவ்வாறு இடம்பெற்றதாகவும் சுமார் அரை மணி நேரம் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா தெரிவித்துள்ளார்.

சிவில் உடை தரித்த மூவர் வழிமறித்து தாம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி தமது அடையாள அட்டையை காண்பித்து, குறித்த வடமாகாண சபை உறுப்பினருடன் எவ்வளவு காலம் வேலை செய்கிறீர்கள், வடமாகாண சபை உறுப்பினரின் வீட்டு மற்றும் அலுவலக முகவரி, தனது வீட்டு முகவரி மற்றும் மேற்கொள்ளப்படும் வேலைகள் தொடர்பில் தன்னிடம் தகவல்களை பெற்றுக் கொண்ட பின்னரே தான் தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்பட்டதாக க.சிறிமதன் கூறியுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More