Home இந்தியா உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழப்பு

by admin


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மின்னல் தாக்கி உயரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More